Tuesday, November 15, 2005

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்

தமிழில் சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் என்று குறிப்பிடும்படியான ஒரு சில மட்டுமே இருந்தாலும் கரைந்த நிழல்களை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இதை விட இன்னமும் சிறப்பாக சினிமா உலகத்தைப் பற்றிச் சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது.

கரைந்த நிழல்கள் - பிம்பங்களாகத் திரையில் வரும் நிழல்களுக்குப் பின்னால் கரைந்து போகும் மனிதர்களைப் பற்றிய கதை. இந்த நாவல் வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

சினிமா சம்பந்தப்பட்ட எவ்வளவோ விஷயங்கள் - அவுட்டோர் - இண்டோர் ஷூட்டிங் பிரச்னைகள், அதற்கான முன்னேற்பாடுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள், தீர்வு காணும் முயற்சிகள், நடிகையின் முட், படத் தயாரிப்பாளரின் வீழ்ச்சி, படத்தின் வெற்றி-தோல்வி, படவுலகக் கவர்ச்சியும் பளபளப்பும், ஸ்டுடியோ நிர்வாகம், புது யூனிட் கட்டுதல், விநியோகமும் விளம்பரமும், இன்னபிற சினிமா விஷயங்களும் நம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது.

முதல் அத்தியாயத்திலேயே நிஜமான சினிமா உலகத்தைக் காட்டும்போது திரையில் இதுவரை பார்த்து வந்த பிம்பங்களின் கவர்ச்சி போய்விடுகிறது. பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.

அவுட்டோர் ஷ¥ட்டிங்குக்குச் செல்லும் நடராஜனிடம் ஆரம்பிக்கும் இந்த நாவல், படத் தயாரிப்பாளர்கள், புரொடக்ஷன் புரோகிராம் மேனேஜர்கள், டைரக்டர்கள், கேமர¡மேன், எடிட்டர், டான்ஸ் மாஸ்டர், அஸிஸ்டெண்ட்கள், நடனப் பெண்கள், மேக்கப்§மன், டாக்ஸி டிரைவர்கள், பட விநியோகஸ்தர்கள், ரிசப்ஷனிஸ்டுகள், கூர்க்காக்கள், வசனகர்த்தா - இப்படி அனைத்துத் தரப்பினரின் வேலைகளையும் சிக்கல்களையும் மிக அனாயாசமாக இந்த 160 பக்கங்களுக்குள் காட்சிப்படுத்தி விடுகிறார்.

இந்த நாவலை மீண்டும் ஒரு முறை படித்து முடித்தபோது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

"கரைந்த நிழல்கள் போன்ற நல்ல நாவல்கள் தமிழில் நல்ல சினிமாவை அளிக்க இருக்கின்றன. அதனைக் கையாள ஒரு டைரக்டர் முன் வரவேண்டும். வராத வரையில் நாவலுக்கோ, நாவலாசிரியருக்கோ குறைவு ஒன்ரும் கிடையாது என்பது நாவலுக்குப் பெருமை தரும் விஷயமாகவே உள்ளது"

கரைந்த நிழல்கள் விமரிசனத்தில் சா.கந்தசாமி

வெளியீடு: கிழக்கு பதிப்பகம் | ISBN: 81-8368-082-8 | விலை: ரூ.60

3 comments:

R.Vijay said...

முத்துராமன், நான் கூட நீங்கதான் சொல்றீங்கன்னு நம்பி படிச்சேன்; கடைசியில் பார்த்தா சா.க சொன்னது என்கிறீர்களே!

Boston Bala said...

நன்றி....

துடிப்புகள் said...

உங்க தாத்தாவை ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க!